க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 168

தாகம்

அவன் தேடும்
அந்த வேலை
தொடரும் அந்த
அதிகாலை

காணும் அந்த
மலைகள்
கவி தான்
பாட தகுமா?

சுற்றி எங்கும்
காடு
மலைக்கு மலை தாவா
மந்தி போல
மனம் தான் பாயும

வேகம் கொண்ட
மனத்திற்கு
வேலை வந்து
சேரா விடினும்

கால்கள் சோர்ந்து
கதவை தட்டியது
தாகம் எனக்கு
தண்ணீர் கிடைக்குமா ?

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading