Vajeetha Mohamed

துளி நீர்

வானம் தெளிக்கும்
பூமி சிலுக்கும்
௨யிரினம் சிலுப்பும்
துளி நீர் ஒவ்வொன்றாய்
வடியும்

ஓலைக்கூரை தாங்கி மடியும்
ஓடும்நதி வாங்கி விழுங்கும்
கொடியும் மல௫ம் கூதலாகும்
மரமும் கனியும் வியர்வையாகும்

௨யிர்கள் காக்கும் துளிநீர்
வறண்டு சு௫ண்ட நிலம்
வரம் பெறும் வளம்
திரவத் தங்கம் ௨ன்
சிறப்பு நாமம்

இயற்கையை அழித்தோம்
நிலத்தடிநீரைக் குறைத்தோம்
ஓர்துளி நீரும் சிந்த மறுக்குதே
ஏரியும் குளமும் கடலும் ஆறும்
பஞ்சத்தில் வாட கீறலாய் நிலம்
கிழிந்து கிடக்குதே துளி நீர்யின்றி

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 220 "நிலா முற்றம்" இரவின் மடியில் அமர்ந்து இருப்பாய் மேகங்களை ஆடையாக அணிபவனே பூமிக்கு குளிர்ச்சி தரும்...

    Continue reading