நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

நன்றியாய் என்றுமே (727) 04,09.2025

நன்றியாய் என்றுமே Selvi Nithianandan மண்ணிலே மெல்லவே அகரத்தை கிறுக்கி கண்ணிலே நீர்வடிய கட்டி அணைத்தவர் அம்மாவின் முந்தானை கைவிடாத...

Continue reading

சக்தி சக்திதாசன்

சிற்சில பொழுதுகள் எனை
சிறை கொள்ளும் வேளைகள்
சிறப்புறு இயற்கையின் வனப்பு
சிந்தையை மயக்கிடும் மலைப்பு

விளைந்திடும் எண்ணங்கள் யாவும்
விதைத்திடும் நிலைகொள் விதைகள்
வியப்போடு நோக்கிடும் கணங்கள்
விந்தையாய் விரித்திடும் சிறகுகள்

துடித்தொரு சிசுவாய் புவியில்
துளிர்த்திடும் நாள் முதல் வாழ்வில்
துலங்கிடும் வகைகளை புரிந்திடா
துல்லிய உணர்வுகள் பற்பல அறிவேன்

நடித்தொரு பாத்திரம் எமக்காய்
நாடகம் எழுதிய இயக்குனன் யாரோ?
நாளும் , பொழுதும் நடப்பவை அனைத்தும்
நானறிந்திட்டேனானல் அது அதிசயமே !

Nada Mohan
Author: Nada Mohan