நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

நன்றியாய் என்றுமே (727) 04,09.2025

நன்றியாய் என்றுமே Selvi Nithianandan மண்ணிலே மெல்லவே அகரத்தை கிறுக்கி கண்ணிலே நீர்வடிய கட்டி அணைத்தவர் அம்மாவின் முந்தானை கைவிடாத...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

சமூகம்…
ஒற்றைச் சொல்லில் ஒரு விருட்சம்
ஒங்கி வளர்ந்து கிளை பரப்பும்
மூங்கில்த் தருவாய் இசை எழுப்பும்
முழுமதி நிலவாய் முனைப்பெழுதும்

சமூகச் சிந்தை சரி நிகராய்
சாலச் சிறப்பு சரிதங்களாய்
உலகின் உயர்வை உருவாக்கும்
உராய்ந்து திறக்கும் விழிப்புணர்வே

அழகில் அவனி மெய்ப்படுமே
அதியுயர் வழித்தடம் புலப்படுமே
சமூகம் சார்ந்த ஒற்றைக்குடில்
சாதனை நிறைக்கும் விருட்சநிழல்.
நன்றி

சந்தம் சிந்தும் கவிக்கள தொகுப்பாளருக்கும், பாமுகப்பங்காற்றலுக்கும், ஒவ்வொரு கவியாளர்களுக்கும் மிகுந்த பாராட்டுக்கள்.

Nada Mohan
Author: Nada Mohan