நன்றியாய் என்றுமே!

நகுலா சிவநாதன் நன்றியாய் என்றுமே! பெரும் செல்வம் கல்விதனை பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம் அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை அன்போடு...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

அபிராமி கவிதாசன்

விருப்பு தலைப்பு ! 31.03.2022

நேரிசை கலிவெண்பா
“ பெண்ணின் பெருமை “

பிறப்பினை ஈன்றிடும் பெண்ணின் பெருமை
சிறப்புடை மானிடத்தின் சீர்மை – அறமாம்
திறமுடை சக்தியால் திண்ணம் நிறைய
இறக்கும் சுமையின் இறை

குலத்தில் விளக்காய் குலமகளாய் நிற்பாள்
நலத்தில் அக்கறை நல்கி-நிலமாய்
இலட்சம் படைப்பாள் இலட்சியம் வெல்வாள்
உலகினை ஆழ்வாள் உழைத்து

எறும்பின் உழைப்பினை எள்ளி நகைப்பாள்
உறுதியின் உண்மையின் உள்ள- அறும்பு
சிறுதுளி வெள்ளமாம் சிக்கனத்தின் செம்மல்
இறுதிவரை காத்திடுவாள் ஈந்து

பின்னுறங்கி முன்னெழும் பெண்மை முழுமதி
புன்னகை சிந்திடும் பூவினத் – தென்றலாம்
அன்றலர் மல்லிகை அன்பியப் பெண்மகள்
மன்றினில் நிற்பாள் மலர்ந்து

மகளிரை வாழ்த்துகின்றேன் மாண்பினை போற்றி
புகழுரை சூட்டி புனித அகத்தால்-
சிகரத்தை எட்டிடும் சித்திர பெண்மை
பகலவன் தீபமாம் பாருக்கு

நன்றி 🙏

Nada Mohan
Author: Nada Mohan