நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

தாய்மை

கருவறையில் சுமந்தவள்.
கருவிழியால் காத்தவள்.
உருவம் தன்னைத் தந்தவள்
உலகத்தைக் காட்டியவள்.

தாய்மை என்பது அழகு,
சேய்மை அதைவிட அழகு.
வாய்மை அங்கு மகிழ்வு.
வாழுமே அங்கு தாயவள் மாண்பு.

வெய்யில் என்றால் மரமாவாள்.
மழை என்றால் குடையாவாள்.
குழந்தைக்குத் தாயானவள்.
குமுகத்தையும் வளர்த்தெடுப்பாள்.

குழந்தைக்கு ஒன்றெனில்
குற்றுயிராவாள்.
மருந்தை விடத்தாய்
மனத்தால் குணப்படுத்துவாள்.

தாய்மை தான் கோவில்
தாயானவளே தெய்வம்
தாய்மையைப் போற்றுவோம்
தாயை வணங்குவோம்.

கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan