கெங்கா ஸ்ரான்லி

தாய்மை

கருவறையில் சுமந்தவள்.
கருவிழியால் காத்தவள்.
உருவம் தன்னைத் தந்தவள்
உலகத்தைக் காட்டியவள்.

தாய்மை என்பது அழகு,
சேய்மை அதைவிட அழகு.
வாய்மை அங்கு மகிழ்வு.
வாழுமே அங்கு தாயவள் மாண்பு.

வெய்யில் என்றால் மரமாவாள்.
மழை என்றால் குடையாவாள்.
குழந்தைக்குத் தாயானவள்.
குமுகத்தையும் வளர்த்தெடுப்பாள்.

குழந்தைக்கு ஒன்றெனில்
குற்றுயிராவாள்.
மருந்தை விடத்தாய்
மனத்தால் குணப்படுத்துவாள்.

தாய்மை தான் கோவில்
தாயானவளே தெய்வம்
தாய்மையைப் போற்றுவோம்
தாயை வணங்குவோம்.

கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading