எல்லாளன் வாரம் 170

சந்தம் சிந்தும் சந்திப்பில்
வதந்திங்கு இணையும் உறவோரே
உந்தும் உணர்வில் கவியாக்கி
எந்தன் ரசனைக்கு உரித்தாக்கி…

வாரம் தோறும் வருவோரும் வந்திடை இடையே இணைவோரும்
நூரா ஆர்வத் தோடு வரும்
நுங்கள் பணியை மதிக்கின்றேன்

வாரம் தோறும் வருமாறு
வருத்தி கேளேன் பலநூறு
சோலி சொந்த பணி உண்டு-உம்
சுமையை உணரும் தெளிவுண்டு

ஆக்கும் கவிதை திறனாய்வால்
அடையும் தகுதி எனும் உங்கள்
நோக்குக் அமைய என் பணியை
நோகாமல் நீர் ஆய்ந்துரைப்பேன்

பாவை அண்ணா எனும் உங்கள்
பாசம் சுரக்கும் பதிவுகளால்
நேயத்தோடு என் நெஞ்சினிலே
நித்தம் வாழ்வீர் சோதரரே.

பாவை புனையும் பணியோடு
பற்பல குடும்ப பணியோடு
ஆவல் மேவ இணையும் நும்
அன்புக்கு நன்றி தொடரவோமே..

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading