Jeya Nadesan

கவிதை நேரம்-28.04.2022
கவி இலக்கம்-1501
வேண்டும் வலிமை
—————————
இருட்டான கருவறையில் உருவாகிய மனிதன்
ஒளியான உலகில் விழுந்தவுடன் அழுகிறான்
வாழும்போது நல்லதாக வாழ நினைக்கிறான்
மனித வாழ்வில் சில சில இடர்பாடுகள்
அற்புதங்கள் அதிசயங்கள் நிகழ்வுகள்
பலவாக அகப்பட்டு வாழ்வில் அல்லறுகிறான்
நம்பிக்கை இழந்து நற்சுகம் இழந்து
தும்பிக்கை என்ற தூய்மை அழிந்து
துன்ப துயர் தொடர்ந்திட்டு வரவே
வலிமை குறைந்து மன நோயாளிகிறான்
தன்னம்பிக்கையுடன் வாழப் பழகி
உடல் வலிமை பெற்று உயர்ந்திட வேண்டு்ம்
உழைக்கட்டும் எறும்பெனவே
வலி குறை மக்களுக்கே
பெருகட்டும் அறச்செயல்கள் பேணிட
பேரன்பு நிறையட்டும் பகிர்தனிலே
உருகட்டும் உண்மைகள் காக்க
ஊர் போற்றும் உறவுகளை உதறிடாமல்
உயர்விற்கு உழைத்து உதவிடுவோம்
சீர் போற்றி வாழ்ந்து சிறந்து
சிதைவினறி வலிமையுடன் வாழ்வோம்

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading