” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

செவ்வாய்
சந்தம் சிந்தும் கவி 179.

அப்பா.

அப்பா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
அப்பா என்றால் பாசம்
அப்பா என்றால் எனக்கு
றோல்மொடல்

நல்லவருக்கு நல்லவர்
கெட்டவனுக்கு கெட்டவர்
அப்பா
படிக்க முடியாத புத்தகம்
புத்தி சொல்வதில் ஆசான்
புத்திரருக்கு தலைகுனிவு
வராமல்
பாசத்தை
மனதில் பூட்டியே வேசம்
போட்டுவார்.

சோற்றில் கைவைக்க முன்
பிள்ளை சாப்பிட்டானா
விசாரிப்பார்

அம்மா பாசம் கண்ணாடி
போல தெரியும்
அப்பா பாசம் கதிரவனை
மறைத்திட்ட முகில் போல வெளியே தெரியாது
தெரிந்தவர் சொன்னால்
தெரிந்திடும் அவர்பாசம்.

உழைத்து சிவந்த கைகள்
உடலில் வேத்து வழியும்
நீரும்
அவர் துயரம்
புரியாத பருவம்
புரிந்த போது கண்ணீரே
பதிலாச்சே.

நிழற்படாமாச்சே
அப்பா நல்ல புத்தகம்
மீண்டு எடுக்க முடியாத
சகாப்தம்.

நன்றி அதிபருக்கும் பாவை அண்ணா .
அனைத்து கவி எழுத்தாளருக்கும் நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan