மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

எல்லாளன்

நெஞ்சின் அஞ்சலி
பல்துறையில் ஆற்றல்மிகு பாங்கு
பாமுகத்தில் பல்லாண்டு நீண்டு
நல்ல பல நிகழ்வுகளின் மூலம்
நாட்டினையே புகழோடு பேரும்
வல்ல திறனோடு பல ஆக்கம்
வந்து நூலால் அச்சுருவில் பூக்கும்
இல்லை இவர் குரல் இன்று என்று
இருந்த தினம் பாமுகத்தில் என்று?

வாதம் எனில் நக்கீரர் நாக்கு
வல்லுனரை இனங்காணும் மூக்கு
தோதாக அணியினரை சேர்த்து
சுவையாக தொகுப்பாயே கோர்த்து
ஏதேனும் குறையில்லா பெண்ணாய்
என்னாளும் முகம் மலரும் தன்னாய்
பூவதனம் பொன் வண்ண கோலம்
பொலிவான மிடுக்கும் அதில் கூடும்.

காலனுடன் மல்லாடும் போதும்
கண்டிலரே துயரை உனில் யாரும்
சால நல்ல கல்வி திறன் வீரம்
சந்ததிக்கே உண் டறிவேன் நானும்
மூலம் அது ஊர் மண்ணின் வீறு
மூச்சடங்கி போவாயோ கூறு
காலனிடம் உடல் வீழ்ந்த போதும்
காற்றலையில் நின் மூச்சு வாழும்

.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading