மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 611
மெய்யானது பொய்யானது

நேற்றிருந்தோர் இன்று இல்லை இன்றிருப்போர் நாளையில்லை
என்றநிலை கொண்டதிந்த பூமியெல்லை பொய்வாழ்வின் புலம்பல் நிலை

தோன்றுவதெல்லாம் மறைவதற்காகவே
பூப்பது ஒருநாள் வாடுவதற்காகவே
ஆட்டமாடும் தேகம் வேகும்
ஒருபிடி சாம்பலாகும்

உண்டு உடுத்தி சுழன்றடித்து
மாயவலைக்குள் அகப்பட்டு
மண்ணென்றும் பொன்னுன்றும் ஆசைக்குள் கட்டுண்டு

புலன்களை அடக்காது ஆடுமிந்த சரீரம்
கெட்டுத்தான் விழுமட்டும் ஓடும்
பட்டுச் சரியுமட்டும் ஆடும்
என்னவெனச் சொல்லுவது காலனுக்கும் அஞ்சாது

வளமைமாறி இளமைவிட்டு முதுமைதொட்டு
இருண்ட விழிகளுடன் நரைதிரைத் தோற்றம்
செவிப்புலன் குன்றி கூனிய முதுகுடன் மூன்றுகால்களில் நகர்வு

காயமது மாயம் தேனானது வீணானது
படைப்பு அழியும் நீர்க்குமிழி உடையும்
மெய்யென்பது பொய்யாகும்
ஆவிவிட்டு உடல் உணர்வின்றிக் கிடக்கும்.

ஜெயம்

Nada Mohan
Author: Nada Mohan