பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏

வியாழன் கவி — 91

தலைப்பு — உறவை பேணுவீர்

உலகெங்கும் உள்ளனர் உறவினர் என்றெண்ணி
நலமான பலமான நமக்குரிய நல்லவற்றை
விலக்கிவிட்டு விலகவிட்டு வாழ நினைக்காது
வளமாக வாழ்விக்கும் அன்பை பேணுவீர் !

பொன்னகையும் போலிப் பொருட்களும் பொருளல்ல
அன்பும் புன்னகையும் அளவிடமுடியா சொத்துக்கள்
என்றும் இவற்றை வோண்டுவோற்கு வழங்கி
மண்ணில் உறவை பாசத்தை வளர்த்திடுவீர்!

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
30/06/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading