மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு தாயகத்தில் தனி உறவு ஐந்துபத்து வயதில் ஆட்டம்போட்ட நாட்டுல நொந்துமனம் விட்டுதான் நாட்டை விட்டோம் ரோட்டில ஆண்டுகள் முப்பது அண்டைநாடு அடைக்கலம் வேண்டினோம் விரும்பினோம் வேதனையோ குறையல சொந்தநாட்டு சொந்தமொன்று சோகத்தோடு காட்டுல வெந்து வெந்துவழியின்றி வேதனையில் தவிக்குதாம் நீச்சலடித்த ஆற்றிலே நீர் குறைந்து விட்டதாம் பாச்சலிட்ட பதுங்குகுழி பாதை மறந்து போனதாம் கூடுகட்டி வாழ்ந்த சொந்தம் கூண்டோடு பெயர்ந்ததாம் வீடுகட்டி வாழ்ந்திடும் வாழ்வுநிலை இல்லையாம் ஊருக்குள்ள அகதி என்று ஒரு கூட்டம் பேசுதாம் பேருக்காக வந்ததாக பெரும்வதந்தி பரப்புதாம் சொந்த நாடு வந்தாலும் சோதனை கோலமென்று சிந்தாத கண்ணீரை சிந்திமனம் நோகுதாம் என்றுதீரும் சோகமென்று என்சொந்தம் பாடுது ஒன்றாய் கூடிவாழ்ந்த உறவுகளை நாடுது தாயக தீவினில் தனிஉறவு கூடது மாய உலகினில் மனிதனை தேடுது நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு தாயகத்தில் தனி உறவு

ஐந்துபத்து வயதில் ஆட்டம்போட்ட நாட்டுல நொந்துமனம்
விட்டுதான்
நாட்டை விட்டோம் ரோட்டில
ஆண்டுகள் முப்பது அண்டைநாடு அடைக்கலம் வேண்டினோம் விரும்பினோம் வேதனையோ குறையல

சொந்தநாட்டு சொந்தமொன்று சோகத்தோடு காட்டுல வெந்து வெந்துவழியின்றி வேதனையில் தவிக்குதாம்
நீச்சலடித்த ஆற்றிலே நீர் குறைந்து விட்டதாம் பாச்சலிட்ட பதுங்குகுழி பாதை மறந்து போனதாம்
கூடுகட்டி வாழ்ந்த சொந்தம் கூண்டோடு பெயர்ந்ததாம்
வீடுகட்டி வாழ்ந்திடும் வாழ்வுநிலை இல்லையாம்

ஊருக்குள்ள அகதி என்று ஒரு கூட்டம்
பேசுதாம்
பேருக்காக வந்ததாக பெரும்வதந்தி
பரப்புதாம்
சொந்த நாடு வந்தாலும் சோதனை கோலமென்று சிந்தாத கண்ணீரை சிந்திமனம் நோகுதாம்

என்றுதீரும் சோகமென்று
என்சொந்தம் பாடுது ஒன்றாய் கூடிவாழ்ந்த உறவுகளை நாடுது
தாயக தீவினில்
தனிஉறவு கூடது
மாய உலகினில்
மனிதனை தேடுது

நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading