மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நகுலா சிவநாதன்

அனலாய் வெப்பம்

அவியும் புழுக்கம் அனலாய் இன்றே
அவனி காணும் அதிவெப்பம்
ஐரோப்பாவை ஆட்டிப்படைக்கும்
அனலாய் வெப்ப அதிகரிப்பு
புனலே இல்லா புழுக்கம் இன்று (புனல் -மழை)
40 பாகையை தாண்டி ஓட்டம்
நாடுகளிடையே எரியும் நிலையும்
காடுகள் எல்லாம் அக்கினி மயம்
காட்டு விலங்குகள் ஓடும் அவலம்

சீற்றம் கொள்ளும் புவியின் நிலையே
சிந்தை கொள்வீர் மானுடரே!
மாற்றம் புவியில் வந்து நின்று
மண்ணில் நிலைமை மாறுதுபார்
ஏற்ற மாகும் வெப்ப அளவே
எரியும் நிலைக்கு வந்திடுமே
சுற்றம் யாவும் காப்போம் நாளை
சுகமாய் வாழ முயல்வோமே!

நகுலா சிவநாதன் 1682

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading