நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

நகுலா சிவநாதன்

அனலாய் வெப்பம்

அவியும் புழுக்கம் அனலாய் இன்றே
அவனி காணும் அதிவெப்பம்
ஐரோப்பாவை ஆட்டிப்படைக்கும்
அனலாய் வெப்ப அதிகரிப்பு
புனலே இல்லா புழுக்கம் இன்று (புனல் -மழை)
40 பாகையை தாண்டி ஓட்டம்
நாடுகளிடையே எரியும் நிலையும்
காடுகள் எல்லாம் அக்கினி மயம்
காட்டு விலங்குகள் ஓடும் அவலம்

சீற்றம் கொள்ளும் புவியின் நிலையே
சிந்தை கொள்வீர் மானுடரே!
மாற்றம் புவியில் வந்து நின்று
மண்ணில் நிலைமை மாறுதுபார்
ஏற்ற மாகும் வெப்ப அளவே
எரியும் நிலைக்கு வந்திடுமே
சுற்றம் யாவும் காப்போம் நாளை
சுகமாய் வாழ முயல்வோமே!

நகுலா சிவநாதன் 1682

Nada Mohan
Author: Nada Mohan