நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1658!
கோடை மழை!
இடியொடு மழையும் இனித்தது இங்கே
இரங்கியே வானது தந்தது நீரை
இறைத்திடும் நீரும் இறங்கியே வந்து
விரட்டிய வெம்மை விலகியே ஓட!

கோடையில் கொட்டும் மழைக்கு மகிமை
வாடிய பயிர்களும் துளிர்த்தது மேன்மை
அடங்காப் பசியென மண்ணின்
உணர்வு
உணர்ந்தே கிடைத்தது உளத்தில்
நிலைத்தது!

இடியும் மின்னலும் இணைந்த ஆற்றல்
விடியும் பொழுதினில் துளியின் தூறல்
இயற்கை தந்த இனிய பொழுது
இதற்கு இணையாய் எதுவோ உயர்வு!
சிவதர்சனி இராகவன்
21/7/2022

Nada Mohan
Author: Nada Mohan