அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1658!
கோடை மழை!
இடியொடு மழையும் இனித்தது இங்கே
இரங்கியே வானது தந்தது நீரை
இறைத்திடும் நீரும் இறங்கியே வந்து
விரட்டிய வெம்மை விலகியே ஓட!

கோடையில் கொட்டும் மழைக்கு மகிமை
வாடிய பயிர்களும் துளிர்த்தது மேன்மை
அடங்காப் பசியென மண்ணின்
உணர்வு
உணர்ந்தே கிடைத்தது உளத்தில்
நிலைத்தது!

இடியும் மின்னலும் இணைந்த ஆற்றல்
விடியும் பொழுதினில் துளியின் தூறல்
இயற்கை தந்த இனிய பொழுது
இதற்கு இணையாய் எதுவோ உயர்வு!
சிவதர்சனி இராகவன்
21/7/2022

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading