23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 182
27/07/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
“பறவைகள் பல விதம்…”
————————————
பாலையும் நீரையும் பிரித்து
பருகிடும் ஆற்றல் கொண்டு
காலமெல்லாம் வாழ்பவளே
கனிவாம் அன்னத் திருமகளே!
கொஞ்சும் இதழெடுத்து
கொவ்வை நிறம் கலந்து
அஞ்சுகமெனப் பெயரெடுத்து
அகிலத்தை ஆள்பவளே!
மஞ்ஞை எனும் பெயரெடுத்து
மானிடத்தின் மனங்கவர்ந்து
நெஞ்சத்தில் நிறைபவளே
நிகரில்லா அரும் மகளே!
தூரத்தில் வரும்போதே
துளைக்கும் குரலெடுத்து
ஆரவாரம் செய்பவளே
ஆர்ப்பரிக்கும் குயில் மகளே!
கூரான மூக்கெடுத்து
குனிந்து முகம் புதைத்து
காரிருள் கலையுமுன்னே
கனிரசம் குடிப்பவளே!
கொண்டைத் தலையசைத்து
கோதி நல்ல வீடமைத்து
அண்டி வந்தோர்க் குதவிடும்
அரும் நிறத்துக் கலைமகளே!
முகத்தில் வெள்ளையடித்து
முழு உலகும் வட்டமடித்து
கணத்தில் கொள்ளையடிக்கும்
கருடனே, கவின் மகளே!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...