அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

11.08.22
ஆக்கம்-238
பசி
பசி பட்டினி காரணம் என்ன
புசிக்க எதுவுமில்லை என்ற
விடைக்குத் தேடிய வினாவில்
புதைத்து விதைக்கப்பட்ட
தேடல்கள்

அங்கிருக்கும் மக்கள் இங்கு புலம்பெயர
இங்கிருக்கும் தொழிற்சாலை அங்கு
இடம் பெயர படித்தாலும்,பிடித்தாலும்
வேலை,சம்பளம் இல்லை
பயிரிருந்தும் விளைச்சல் இல்லை

காலநிலை மாற்றம் காவலில்லா சீற்றம்
பசி வந்தால் பத்தும் பறக்கும்
கோயில் இடித்து கட்டிடம் புகுந்து
களவெடுக்கத் தோன்றும்

பசியால் துடிப்பவனும் சுற்றமே
நினைத்துவிட்டால் அவனது
வெற்றிடம் நிரபபி வேதனை
தீர்த்து பணிவால் பற்றிப்
பிடிப்போமே.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading