பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

சொந்தங்களே சொத்துக்கள்

சொந்தங்கள் நடுவில் வாழ்கின்ற போது
சிந்திடும்  ஆனந்தத்திற்கு எல்லைதான் ஏது
வந்து வாழ்க்கையை அழகாக்கும் தினமும்
தந்து சுகத்தை கரைந்திடும் கணமும்

உள்ளத்து அடியில் பாசமாய்ப் பொங்கிடும்
கள்ளம் இல்லாத நேசமாய்த் தங்கிடும்
கட்டி அணைக்கையில் உயிரும் உருகிடும்
கட்டி இன்பத்தை வாழ்க்கையும் பெருக்கிடும்

உறவுகள் அருகினிலே ஒருகோடி நிம்மதி
வரவாகும் என்பதெல்லாம் தெரிந்ததோர் சங்கதி
தனிமையே போதுமென நெருக்கத்தை தவிர்த்திடலாமா
இனிமையை அனுபவியாது இறுதிவரை தவித்திடலாமா

ஜெயம்
08-08-2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading