மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 185
” இன்றைய இலங்கை”

தாய்நாடே இன்றி நீ தரைதட்டிய கப்பலானாய்
தாங்கவோ எவருமில்லை
ஐநூறு ஆண்டுகள் அந்நியராட்சி, அடிமைத்தளை
ஆனாலும் அன்றில்லை வாழ்வாதாரச்சுமை
இனத்துவேஷமும் பணப்பதுக்கலும் காரணமாய் கையறுநிலை

சொல்வது எளிது செய்வது கடிதமொய் கரைத்து பதவிபெற்றாய்
கஜானவில் காசில்லை, கபளீகரம் செய்தாய்
கேட்பதற்கு ஆளில்லை மூன்றிலிரண்டு பெரும்பான்மை
கேட்டாலும் வென்றிடுவாய்
வெகுஜனப் போராட்டம் வெடித்தாலும் தலைமறைவாய் தப்பிடுவாய்.

சனத்தொகைக்கு சமமாய் இராணுவம் சேர்த்தாய்
கடன்பட்டு ஆயுதம் குவித்தாய் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்தாய் அஞ்ஞாத காலத்தில் அவை உனக்குதவும்
திட்டமிட்டே செய்தாய்! எடுத்ததை வைத்துவிடு தப்பிப்பாய்
தாய்நாட்டின் தலைநிமிரும்,மண்ணின் மைந்தர் மனங்குளிரும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading