” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 185
” இன்றைய இலங்கை”

தாய்நாடே இன்றி நீ தரைதட்டிய கப்பலானாய்
தாங்கவோ எவருமில்லை
ஐநூறு ஆண்டுகள் அந்நியராட்சி, அடிமைத்தளை
ஆனாலும் அன்றில்லை வாழ்வாதாரச்சுமை
இனத்துவேஷமும் பணப்பதுக்கலும் காரணமாய் கையறுநிலை

சொல்வது எளிது செய்வது கடிதமொய் கரைத்து பதவிபெற்றாய்
கஜானவில் காசில்லை, கபளீகரம் செய்தாய்
கேட்பதற்கு ஆளில்லை மூன்றிலிரண்டு பெரும்பான்மை
கேட்டாலும் வென்றிடுவாய்
வெகுஜனப் போராட்டம் வெடித்தாலும் தலைமறைவாய் தப்பிடுவாய்.

சனத்தொகைக்கு சமமாய் இராணுவம் சேர்த்தாய்
கடன்பட்டு ஆயுதம் குவித்தாய் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்தாய் அஞ்ஞாத காலத்தில் அவை உனக்குதவும்
திட்டமிட்டே செய்தாய்! எடுத்ததை வைத்துவிடு தப்பிப்பாய்
தாய்நாட்டின் தலைநிமிரும்,மண்ணின் மைந்தர் மனங்குளிரும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan