அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தத் தமிழ் தந்திட்ட
சிந்தும் தேன் துளிகள்
விஞ்சும் வகையிலொரு
கொஞ்சும் கவிதை வரும்

அன்னை மடியினிலே நானும்
அன்று தவழ்ந்திடுகையில்
அள்ளிப் பிசைந்த என்
அன்புத் தமிழ் மண்ணின்

வாசம் இன்றும் கமழுது
நேசம் நெஞ்சில் கரை புரளுது
வீசும் தென்றலது தானும்
பேசும் மொழி தமிழென்றாடுது

தேசம் கடந்து சென்றாலும்
வேஷம் பல சுமந்து நின்றாலும்
நீசம் பல கடந்து வந்தாலும் – மொழி
நேசம் மறந்து போவேனோ ?

உருண்ட அகவைகள் பலவாக
திரண்ட அனுபவம் செடியாக
புரண்ட நினைவுகள் சுமையாக
வ்றண்ட நிலையிலும் தமிழ் தேனே 

கருவினில் சுமந்திட்ட அன்னையவள்
சுரந்திட்ட பாலிலும் தமிழோடி
நிறைந்திட்டு எண்ணத்தில் பதிவாகி
பரந்திட்டு சிந்தையில் கவியாக

இயங்கிடும் சுவாசம் இருக்கு மட்டும்
முழங்கிடும் எழுத்துக்கள் தமிழாக
இறந்திட்ட பின்னாலும் தமிழாக
இயற்கையில் தவழ்வேன் தென்றலென

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading