மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நாதன் கந்தையா

*ராணி மகாராணி*

நேரியகோட்டிடை நிமிர்ந்து நீ நின்றாய்
நிச்சியமானது மானுடம் என்றாய்
ஓருகுடை அடியினில் உலகமும் என்றாய்
உயர்ந்தொரு ராச்சியம் பரந்து நீ கண்டாய்
ஆண்டுகள் எழுபது மணிமுடிசூடி
ஆண்ட என் அரசியே ராணியே வாழி.

பார்முழுதாகிய ஆங்கிலம் கண்டோம்
பரவசமானது உன்மொழி என்றோம்
நேர்மறையான பண்புகளெல்லாம்
நிமிர்ந் தெழுந்துலகில் நிறைந்தது கண்டோம்
ஆண்டது நீயது அரசியென்பதனால்
ஆகாசவாணியே ராணியே வாழி.

பூவிலும் மெல்லிய புன்னகையாளே
போரினில் உலகினை வென்றவள் நீயே
வானத்து சூரியன் விடுப்பெடுக்காமல்
வந்துநுன் சேவகம் செய்தவன் என்பர்
ஐம்பத்தியாறு தேசங்கள் ஒன்றாய்
ஆண்டமா ராணியே அங்கயற்கண்ணி.

வீழ்ந்திடவில்லை யுன்ராச்சியம் இன்றும்
வென்றிட யாருமே பிறந்ததுமில்லை
நின்று நல்லுலகம் நாளையும் பேசும்
நிமிர்ந்தவுன் புகழது உலகிடை நீளும்
மாண்பொடு மரகதமானவள் நீயே
மங்காத வைரமே மாராணி வாழ்க.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading