பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 193
27/09/2022 செவ்வாய்
மழை நீர்
————-
தாழுண்ட நீரைத் தலையாலே
தான் தரும் தெங்கு போலே
தானுண்ட நீரை வட்டியுடன்
தந்திட வானும் நினைத்ததுவே!

கொட்டியது மழையும் நாடி
குளிர்ந்ததே அதனால் பூமி
பட்டிதொட்டி நிறைந்த நீரும்
பாய்ந்தோடி வீணாய் போச்சே!

கொட்டிடும் நீரைக் காத்திட
கொள்கலன் அமைக்க வேண்டி
கட்டினர் குளங்களை மன்னர்
கண்ணென மக்களைக் காத்தனர்!

மழை பொய்த்துப் போய்விட
மானாவரிச் செய்கைக் கால
விளை பயிரைக் காப்பதற்கு
விழைந்தனர் மன்னர் அன்று!

கடலுக்கு ஓடுகின்ற நீருக்கு
கடிவாளம் போட்டதால் அன்று
திடலிலே பயிர் செய்தோரும்
தீர்வு கண்டு மகிழ்ந்தனரே!

சிறு சிறு குளங்கள் இன்று
சீரழிந்து போக, வெள்ளம்
பெறுமதி இன்றியே பரவி
போய்விடும் கடலை மருவி!

தூர்ந்து போன குளமும்
தூர் வாராத கால்வாயும்
சேர்ந் திருந்தால் போதும்
சேமிப் பில்லாது போகும்!

கார் பொய்த்து விட்ட தென
கண் கலங்கி வாழாது நீரும்
ஊர்க் குளம் பல வற்றையும்
உடன் சென்று தூர் வாரும்!

அரசு செய்து தருமென்றே
அசமந்தம் காட்டாதீர் நீரே!
சிரசினில் கொள்வீர் இன்றே!
சீக்கிரம் மகிழ்வீர் வென்றே!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading