அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

மழைநீர்

மரம் இலை துளிர்விட உணவாக மழைநீர்
உரம் அதை வீணாக்காது மனிதா சேர்த்திடப்பார்
பூமி பூத்திட துள்ளி வருகின்றதே துளித்துளியாய்
சாமி அதுவென கொண்டாடி மகிழ்ந்திடு வழிவழியாய்

புல்லுக்கும் நெல்லுக்கும் பாலூட்ட விண்ணின்று வந்ததோ
செல்லமாய் முத்தமிட்டு இலவசமாய் இருப்பதைத் தந்ததோ
வறண்ட பூவுலகும் தணித்தே சூட்டை செழிப்புற்றதே
மறந்து கவலைகளை உயிரினங்கள் சுகம் பெற்றதே

மழையே வாவா நான் மயிலாய் மாறிட வா
விளையாடியே சிறுவனாய் காகிதக் கப்பலை ஓட்டிடவா
உலகத்து பயிர்களின் உயிர்களைக் காத்திட வா
சில மணித்துளிகளில் தூறலால் ஆசீர்வதித்திட வா

ஜெயம்
27-09-2022

Nada Mohan
Author: Nada Mohan