” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

மனிதா!செய் நன்றி மறந்தவனே
புனிதமான சூழலை போக்கடித்து மாசாக்கி
கரியமல வாயு விளைகின்ற காட்டை எல்லாம்
காசாக்கி நிலமாக்கி கட்டங்கள்
வானளவில்
கோபுரமாய் கட்டி
கொண்டுள்ளாய்
கொடிய நச்சு கழிவுகளை
அடுத்த நாட்டை அழிக்க அணுகுண்டை
அளவு கணை ஷெல் பொம்பர்
எத்தனையோ எத்தனையொ
நாடுகள் இடையே நடக்கின்ற போராலே
வானத்தே மாசாய் வந்து குவிகிறதே
காடுகள் எரிகிறதே காலமெல்லாம் தடுக்க
ஆவன செய்தாயா
பீச்சும் எரிமலைகள்
காற்று புயலாய்
காலமெல்லாம் எங்கெங்கோ
இயற்கை சம நிலையை இழந்த நிலை
வானத்தில் ஓட்டை
வழிந்து அவ்வழியே
கோர கடும் மழையாய்
கொட்டுவது என் தவறா
ஐம்பூதம் என்பாய்
ஆமாம் நாம் பூதம்தான்
நிலத்தை நீரை நெருப்பை
காற்றை பகைத்துவிட்டாய் வானத்தால் பார்க்கின்றேன்
மனிதா திருந்து மாறு
அளவாய் பொழிவேன்
ஆறுதலை தருவேன்
மழை நான் உன்னை மன்றாடி கேட்கின்றேன்

Nada Mohan
Author: Nada Mohan