மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கீதா பரமனந்தம்

விலகிச் செல்லும் கோடை!

உலவுது இருளின் சாடை
உதயம் காணுது வாடை
விலகிச் செல்லும் கோடை
விதைத்து நிற்குது மஞ்சளாடை !

புவியின் சுழற்சிப் பாதை
புனைந்து தந்த கீதை
நழுவும் இளமைக் கோலம்
நயக்கும் புதுமைத் தூலம்!

கதிரின் அணைப்பு விலகி
கனத்த கூதல் சூடும்
உதிரும் பசுமை கண்டே
உறவும் எட்டிப் போகும்!

பிறையில் வளரும் நிலவாய்
பிணைக்கும் நம்பிக்கை சூடி
அணைக்கும் தளிர்கள் நாளை
அதுவரை காப்பேன் தனிமை

27-10 -2021

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading