மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

இராசையா களரிபாலா

தேடல்
———-
அறிவுப் பசிக்காய் ஆற்றலுடன் தேடல்
வறியவன் வாழ்வில் வளம்பெறத் தேடல்
புரியாத அனைத்துக்கும் பதில்தரும் தேடல்
சரியா தவாறா சரிப்படுத்தும் தேடல்

இயற்கையின் எல்லையை அறிந்திடத் தேடல்
செயற்கையை உருவகிக்க செயல்வீரன் தேடல்
காதலன் காதலியை காலத்தில் தேடல்
ஆதலினால் காதலியும் ஆடவனைத் தேடல்

பணத்திற்காய் பரதேசம் போயும் தேடல்
கணத்தில் பந்தமின்றிக் கனவினில் தேடல்
இனமெலாம் ஒன்றாக இணைந்திடத் தேடல்
மனமே உறுதிகொள மறுவாழ்வு தேடல்

பெற்றோர் உழைப்பில் பிள்ளைகள் தேடல்
கற்றவராய் ஆகவே கடிந்தும் தேடல்
பற்றுடன் பிள்ளைகள் பரவசத்தின் தேடல்
நற்றவை யாவும் நானிலத்தில் தேடல்

இல்லை என்றதும் இறைவனைத் தேடல்
கல்லும் இரங்கிடும் கரணத்தில் தேடல்
புல்லுக்கு மழைநீர் புவியின் தேடல்
அல்லும் பகலும் அகன்றதே தேடல்.

இலண்டனிலுந்து
இராசையா கௌரிபாலா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading