பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

இராசையா களரிபாலா

தேடல்
———-
அறிவுப் பசிக்காய் ஆற்றலுடன் தேடல்
வறியவன் வாழ்வில் வளம்பெறத் தேடல்
புரியாத அனைத்துக்கும் பதில்தரும் தேடல்
சரியா தவாறா சரிப்படுத்தும் தேடல்

இயற்கையின் எல்லையை அறிந்திடத் தேடல்
செயற்கையை உருவகிக்க செயல்வீரன் தேடல்
காதலன் காதலியை காலத்தில் தேடல்
ஆதலினால் காதலியும் ஆடவனைத் தேடல்

பணத்திற்காய் பரதேசம் போயும் தேடல்
கணத்தில் பந்தமின்றிக் கனவினில் தேடல்
இனமெலாம் ஒன்றாக இணைந்திடத் தேடல்
மனமே உறுதிகொள மறுவாழ்வு தேடல்

பெற்றோர் உழைப்பில் பிள்ளைகள் தேடல்
கற்றவராய் ஆகவே கடிந்தும் தேடல்
பற்றுடன் பிள்ளைகள் பரவசத்தின் தேடல்
நற்றவை யாவும் நானிலத்தில் தேடல்

இல்லை என்றதும் இறைவனைத் தேடல்
கல்லும் இரங்கிடும் கரணத்தில் தேடல்
புல்லுக்கு மழைநீர் புவியின் தேடல்
அல்லும் பகலும் அகன்றதே தேடல்.

இலண்டனிலுந்து
இராசையா கௌரிபாலா

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading