மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-18.08.2022
கவி இலக்கம்-1559
பிரிவாற்றாமை
——————————-
மனிதம் தொலைந்து சுய நலம்
தாண்டவமாடும் காலமாயிற்று
நாடு விட்டு நாடு வந்தாலும்
நாவு உச்சரிக்கும் நம் தேசம்
இடம் விட்டு இடம் பெயர்ந்தாலும்
இதயத்தில் என்றும் எம் உறவுகளே
ஆண்டாண்டு காலமாய்
மாண்டு போனது எம் பரம்பரையே
தமிழனின் நல் விடிவுக்கு
தலை நிமிர்வின் முடிவுக்கு
அடிமை வாழ்விற்கு முடிவே இல்லை
நடு நிலைமை காணத்தான் ஆட்சிகள்
தேர்தல் வரும் ஆட்சி தேர்வும் நடக்கும்
கதிரைகள் மாறும் சண்டைகளும் வரும்
மாண்டு தொலைந்த உறவுகள் குரலும் எழும்பும்
மனித ஏக்கமதில் தொலைந்தோர் நினைவில்
இழந்த வாழ்வாக பிரிவாற்றாமை துயரில்
நியாயம் கேட்டு குரல் கொடுத்து நின்று
விடிவுக்காய் காத்து கிடக்கும் இனம்
நம் பலம் சேர்ந்து உரிமைக்காய் குரல் கொடுப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading