” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ மனிதநேயம் “……கவி……ரஜனி அன்ரன் (B.A) 18.08.2022

மனிதனை மனிதன் மதிக்க
மன்னுயிர்களைத் தன்னுயிராய் காக்க
காருண்யம் கருணையைப் பேண
தன்னைப் போல் மற்றவரையும் நேசிக்க
மனிதநேயம் காத்து மாந்தராய் வாழ
புனிதமாய் தந்ததே ஐ.நா.மன்றும்
ஓகஸ்ட் பத்தொன்பதாம் நாளை
அனைத்துலக மனிதநேய தினமாக !

பசியினால் துடிப்போர்க்கு பசியாற்றி
பாதையில் விழுந்தோர்க்கு கைகொடுத்து
பார்வை இழந்தோர்க்கு வழிகாட்டி
பக்க துணையாக இருப்போம்
பயணிப்போம் என்றும் மனித நேயத்துடன் !

அரிதான மானிடப் பிறப்பினில்
மாய விம்பத்தை நீக்கி
மனித நேயத்தைக் காத்து
பேதமின்றியே வாழ்ந்து
புதுவேதம் படைப்போம்
வற்றாத ஜீவநதியாக எங்கும்
வளமாகப் பாயட்டும் மனிதநேயம்
மனித நேயமே மாந்தர்க்கு அழகு
மனுதர்மமே வாழ்விற்கு செழிப்பு !

Nada Mohan
Author: Nada Mohan