பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 96

பேசாமல் பேசும் உலக மொழி

ஒலி இன்றிய உலகம்
எனதாகிப் போச்சு
அமைதி எனது
மனதில்
நிசப்தம் என
கொள்ளலாமே!

கண்கள் பேசும்
கவிதையை
கருத்தினில்
நாளும் உணர்வேனே !

சொல்லும் உதட்டின்
குவிதலைப் பார்த்து
குறி கொண்டு
செய்தியை அறிந்திடுவேனே!

விரல் அங்க
அபிநயமும்
எழுத்தறிவும்
விரைந்து பேசும்
செயற்திறனை
தந்திடுமே !

தடைகள் ஏதுமில்லை
தயக்கங்களை. மனதில்
களைந்தால்

பேசாமலும் பேசலாம்
பேதமையையும்
போக்கிடலாமே !!!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading