Selvi Nithianandan

வகுப்பறை ஆளுமை 540
அகரத்தை மெல்லெனவே எழுதவைத்து
அன்பாய் பாசமாய் பரிவாய் அணைத்து
மண்ணிலும் சிலேட்டுமாய் கிறுக்கவைத்து
சிகரமாய் ஏற்றிவிட்ட பெருந்தகைகள்

பள்ளிகளில் பலவாய் இருப்பதும்
படிப்பு என்பதால் அறைமாறுவதும்
பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து பறப்பதும்
நடிப்பும் கற்றலாய் ஆளுமையாகும்

சுண்ணாம்புக்கட்டி கரும்பலகையில் ஓவியமாய்
சுற்றம்சூழ்ந்து நண்பர்களாய் கூட்டம்
சுதந்திரமாய் வகுப்பறையில் நாட்டம்
சுபீட்சமாய் கல்வியிலும் ஆளுமையாய்

ஏற்றிவைத்த பல ஆசிரியர் எனக்குள்ளே
ஏற்றத் தாழ்வின்றி உயர்த்திய ஆசானாய்
எப்போதும் தெரியாததை அறியமுயலும்போதும்
ஏகமனதாய் விளக்கம் தந்தவர் ஏராளம்
தாராளமாய் ஆசிரியர் தினத்தில்
மதித்து தலைவணங்கி நிற்கின்றேனே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading