பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

Kavi 625

ஒன்றுபடுவோம்

ஒன்றுபட்டிங்கு வாழ்தலே வாழ்வு
என்றெண்ணிக்கொண்டாலே வராதே தாழ்வு
ஒருவர்மேல் ஒருவருக்கு வேண்டாமே வெறுப்பு
அருமையாக ஒன்றுகூடி வாழ்வது நம்பொறுப்பு

ஆதிமனிதர்கள் காட்டுமிராண்டிகளாக அடிபட்டார்
பாதியைக் கடந்த பின்னரே அனுபவப்பட்டார்
அன்றைய மனிதர் வேடுவராகக் காட்டில்
இன்றைய மனிதரோ நாகரீகத்தின் நாட்டில்

கூடி வாழ்தலில் கோடி நன்மை
கூறினார் மூத்தோர் அதுவே உண்மை
அடம்பன் கொடியும் திரண்டாலே மிடுக்கு
இரண்டுகை தட்டலிலே ஓசையின் பிறப்பு

தனிமரம் தோப்பாகாது என்பது பழமொழி
பிணியது தீரட்டும் பிறக்கட்டும் புதுவழி
நானென்ற அகங்காரம் சிந்தைவிட்டு தொலையட்டும்
வீணான பெருமைகளின் எண்ணம் விட்டகலட்டும்

மேலோரென்றும் கீளோரென்றும் பார்க்காது பேதம்
வாழ்வோர் வாழ்வதுவே வணங்கவேண்டிய வேதம்
ஏழையென்றும் கோழையென்றும் எதற்கிங்கே பிரிவு
ஆளையிங்கு பார்க்காமல் காட்டலாமே பரிவு

மதவெறி கொண்டே அலைவதும் தகுமோ
அது கூறும் சமத்துவ வாழ்க்கையற்ற ஜெகமோ
வேற்றுமைப்பட்டால் அது தருவது வீழ்வாகும்
ஒற்றுமைப்பட்டால் அங்கு வருவதே வாழ்வாகும்

ஜெயம்
12-10-2022

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading