பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ சிறுகதையின் முன்னோடி “…கவி..ரஜனி அன்ரன் (B.A) 13.10.2022

ஈழத்துக் கலைஞன் சிறுகதை மன்னன்
இலங்கையர்கோன் எனும் சிவஞானசுந்தரம் ஐயா
ஈழத்தில் ஏழாலையில் பிறந்து
நாடகத் துறையோடு விமர்சனத் துறையிலும்
நாட்டம் கொண்டு சிறுகதையின் முன்னோடியாகி
தமிழோடு இலத்தீனும் ஆங்கிலமும் பயின்று
தமிழுக்கு ஆக்கினாரே சிறுகதைத் தொகுப்புக்களை !

சட்டம் பயின்று சட்டத்தரணியாகி
நிர்வாக சேவையிலும் அதிகாரியாகி
வரலாற்று நிகழ்வுகளை சிறுகதைகளாக்கி
ஆங்கிலக் கதைகளையும் மொழிபெயர்த்து
ஆக்கினார் பற்பல சிறுகதைத் தொகுப்புக்களை
பட்டை தீட்டிய வைரமாக ஒளிர்ந்து
உயர்தர பாடத்திட்டத்திலும் வந்து
அடையாளத்தைக் கொடுத்தது வெள்ளிப்பாதசரம் !

உரையாடல்களை உன்னதமாக்கி
யாழ்ப்பாணத்தைக் கதைக்களமாக்கி
வாழ்க்கையை மனிதஉறவுகளைக் கருவாக்கி
உருவாக்கினாரே சிறுகதைத் தொகுப்புக்களை
நாற்பதுகளில் சிறுகதைகளின் முன்னோடியாகி
நாற்பத்தியாறாம் வயதில் அக்டோபர் பதினான்கில்
இவ்வுலகை விட்டு ஏகினாரே சடுதியாக !

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading