பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1705
காரணம் தேடுகிறோம்!
புதிது புதிதாய்த் தினமும் கற்றும்
புரியாத விடயங்கள்
புவனத்தில் உண்டு!

முயன்று தினமும்
உழைத்து சேர்த்தும்
இல்லாமை வந்தே
வாட்டுவது உண்டு!

விட்டுக் கொடுத்து
விருப்பு அறிந்து
பழகிக் கொண்டும்
பிரிவினை சூழ்வது கண்டோம்!

நம்மை நாமே
நியாயப் படுத்தி
நிம்மதி தேடியே
பிழைத்துக் கொள்ள
காரணம் தேடுகிறோம்!
சிவதர்சனி இராகவன்
13/10/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading