” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(82) 16/11/22
நினைவுகள்
கடந்த காலத்தினை
உணர்வுகளாய் நினைவுகளாய்
மறக்க முடியாமல் தவிக்குது
மனித மனம்

திரும்ப பெற முடியா
அழகிய நினைவுகள்
நிகரில்லாக் காட்சிகளாய்
இள வயது ஞாபகங்கள்

மறக்க இயலா நினைவுகளை
மீண்டும் நினைக்குது உண்மை அன்பு
முகவரி இன்றி முடிந்து போன
உறவைத் தேடுது நம் நினைவு

காலம் கடந்தாலும்
நினைவுகள் என்றும் அழிவதில்லை
கடந்த கால நினைவுகளே
நம் வாழ்வின் வசந்த காலம்

சொந்தங்கள் என்றும் தொடர் கதையாய்
மீண்டும் எம்மோடு தொடர்ந்து வர
பல்லாண்டு வாழ்க வாழ்கவென
வாழத்துகின்றேன் இந்நாளில்

Nada Mohan
Author: Nada Mohan