தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 201

கனவு மெய்பட வேண்டுமே

தேம்பிடும் இரவுகள்
தெம்மாங்கு பாடிட
ஏங்கிய பொழுதுகள்
ஏற்பதனை தேடிட

வாழ்வதன் சூத்திரம்
வகையாக வந்திட
காத்திடும் தெய்வமும்
கருனை தந்திட

மாற்றார் பார்வையில்
மாற்றமும் காணிட
மங்கையின் கையிலும்
வளையல்கள் குளுங்கிட

உறவுக்கு பாலமாய்
தொட்டிலும். ஆடுமே!
உன் கனவும்
மெய்திட வேண்டுமே!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan