29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
திருமதி.அபிராமி கவிதாசன்.
29.11.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் – 202
“நினைவு நாள் “
மகளே மடிசுமந்து வார்த்தஅன்னை
மரண தீபம்ஏற்ற வந்தேன்
தகனம் கண்ட தருணம் எண்ணி
தணலில் விழுந்த புழுவாய் நின்றேன்
உன்முகம் எந்தன்அகம் முன்னே
வந்து வந்து போகுதம்மா
மரணித்த ஞாபகத்தை
தந்திவந்து சொல்லுதம்மா
பகல் கனவாய் போனதம்மா
பாவி கண்ட கனவெல்லாம்
பால்வார்த்த நெஞ்சமிங்கு
பற்றியே எரியுதம்மா
தாயக மண்ணிற்கு
தந்தேனுன்னை இரையாக…
தானம் ஈந்தகையிரண்டும்
தவிக்குதம்மா தனிமையிலே
கல்லறையை கண்டுகண்டு
கண்ணீராய் குருதியோட்டம்
புல்லரித்து தேகமெங்கும்
புண்பட்டு கொதிக்குதம்மா
பூவான உன்முகம்
போரினில் கருகக்கண்டு
பூவனமும் வாடியதே
பூவேநீ உதிர்க்கையிலே
அகல்தீபம் ஏற்றியே
ஆண்டுதோறும் அழுகின்றேன்
என்முகம்முன்னே நீவந்து
என்முத்துக் கண்ணீர்துடைப்பாயோ !
நன்றி . பாவை அண்ணா🙏

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...