தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

வியாழன் கவிதை நேரம்!! கவிதை-2311 தண்ணீருக்காய்த் திரளும் போர் மேகங்கள்..!! ஆழக்கடலைக் கடக்கின்ற அத்தனை கப்பல்களும் அள்ளிக் கொணரும் நமக்காய் அத்தியாவசியப் பொருட்களை.. அந்தோ...

Continue reading

தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள்

ராணி சம்பந்தர் மண்ணிற்கும் விண்ணுக்குமே மழை நீரில் ஏணிகட்டி குதூகல கொண்டாடத் தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள் தாகம் சுழலும்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்..

வசந்தா ஜெகதீசன் தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்... வரட்சி நிலைபோக்கிடுமே வளமது திரண்டிடுமே கார்மேகக் கறுக்கலிலே கனமழை பெய்திடுமே காரியத்தின் சித்திகளும் கைகூடும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

கலங்கரைக் கைதிகள்….
விலங்கற்ற விடியலில்
விவேகத்தின் சக்தி
விதையிட்ட நிலத்திலே
காலத்தின் யுத்தி

ஞாலத்தை ஆளுது
சமூகத்தின் சாரல்
நாளுமே அழிவுகள்
தொடர்கின்ற வேகம்

கல்வியில் சிதைவு
கலாச்சார அழிவு
போதையின் வஸ்து
புரளுது வாழ்வு
மாற்றத்தின் கதவு
மனிதத்தின் உலகு
அகப்படும் அவலங்கள்
ஆயிரமாகும்
அகங்களின் இருளே
அவலத்தை பகிரும்
கலங்கரைக் கைதியாய்
நிலங்களை சூழ்ந்த
கறைகளை களைதலே
காலத்தின் வெற்றி
கண்கெட்ட பின்னே
சூரிய நமஸ்காரம்
நானிலம் நம்முன்
நலிந்தே வீழும்
நாளைய சந்ததி
நல்வழி இன்றி
வாழ்தலை சுட்டும்
கலங்கரை கைதிகள்
நாமே நமக்கு விலங்கிடல் விதியே.!
நன்றி
மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading