நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி
மார்கழி. 202

மார்கழி திங்கள் வந்திவே
திருமண நாளும் வந்திடுமே என் வாழ்விற்கு அர்த்தம் தந்தே
மார்கழியில் பூத்த மகளே!

பாலன் உதித்த மார்கழி திங்களே
பாரும் மகிழ்ந்தே கொண்டுமே
பாடி ஆடி பரிசும் கொடுத்து
பட்டாசு கொளுத்தி மகிழுமே.

கார்த்திகை தீபமும்
திருவெண்ணாமலையில்
ஒளிருமே
பாவையர் நோன்பும், சுவர்கவாசலும் திறந்திடுமே
மனமும் மகிழுமே.

பகலவன் ஓடியே ஒழித்திடவே
காத்திகை நிலவும் வந்திடுமே.
காரிருள் பாரினை மறைத்திடவே குளிரும் மேனியை தழுவுமே

வெள்ளை பனியும் கொட்டுமே சிறுவரும் கூடி விளையாடியே
மார்கழி மதி நிறைந்த
நல்நாளை நாமும்
கொண்டாடி மகிழ்வோமே!

அதிபர்
பாவை அண்ணா நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading