வசந்தா ஜெகதீசன்

உயிர்நேயம்…..
மனிதத்தின் நேயமே மாண்புறு வாழ்வு
அகிலத்தை ஆளும் ஆற்றலின்
தோப்பு
அழிவுகள் கண்டு குமுறிடும் நெஞ்சம்
அநீதியின் தீர்வில் கொதித்திடும் உள்ளம்
சேவையின் செதுக்கலில் செம்மையுறும்
உதவிடும் நியதியில் உறுதுணை வரமாய்
காலத்தின் கணதியை கரைத்திடும் பலமாய்
மனிதத்தைப் பேணும் மனதின் உராய்வே
உயிரின் நேயமாய் உணர்வை வருடும்
தினமும் தேவையைத் தேடி உதவும்
நலிவின் சிதைவை நசுங்கி விலத்தும்
நம்பிக்கை நாணயம் வலுப்பெறும் வரம்பே
மனித நேயத்தின் மதியின் கடலே
உளமே ஊற்றாய் ஐக்கியம் பேணும்
உதவும் அகமே ஒளிர்வாய் ஒளிரும்
மனிதவலுவே மாற்றத்தின் திடல்
ஆற்றும் தொண்டே அளப்பெரிது
அகத்தால் ஒன்றுதல் அகிலத்துலகு
உயிரின் நேயமே உலகில் பெரிது.
நன்றி
மிக்கநன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading