16
Jul
மாறியதே வாழ்க்கை
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
சந்தம் சிந்தும் சந்திப்பு
பக்குவம் தந்த ஆசான்
குன்றிலிருக்கும் குலதெய்வம் ஆசான்
என்றும் எமக்குமே ஏணியாய் – நின்றுமே
ஊக்கம் தருகின்ற உன்னத பண்பாளர்
நோக்கம் கருதாத நிறைவு
நிறைகுட மாகவே நேர்த்தியாய்க் கற்கக்
கறையில்லா( து) ஊட்டுகின்ற கல்வி- துறைசார்பாய்
ஏற்றம் வரவே எழுத்தறி வித்தகுரு
போற்றிட நாமும் பணிவு
பணிவுமே வாத்தியாரின் பக்குவம் தந்ததே
துணிவாய் மரபில் துலங்கி – மணிமணியாய்
சற்றும் தயங்காச் சரஸ்வதி தேவியும்
பற்றாய் பயிற்றினார் பார்த்து.
கோசலா ஞானம்.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.