சிவதர்சனி இரா

வியாழன் கவி 1739!
மாற்றங்களை ஏற்றிடு!

மாற்றம் என்பது
நிலைக்க
மனமே நீ மாற்றங்களை
ஏற்றிடு!!

சாற்றிடும் வெற்றியின்
படிகளாய் அவை
தினம் உன் கண் முன்
மின்னும் மிளிரும்!

நமக்கான வேளை இது
தக்க பயிரிடும் நாளை
நமக்காய்ப் பரிசளிக்க
காலம் தந்த கணிப்பு இது!!

மாறிடவே மாட்டோம்
என மனதுக்குள் சபதம்
போட்டே வாழ்வதில்
ஏது பலாபலன்?!

உண்மை கண்டு
உணர்ந்தால் உரிய
யாவருக்கும் சொல்லிவிடு
இது அனுபவ வாழ்வியல்
என்றே ஆகிட!!

சிவதர்சனி இராகவன்
15/12/2022

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading