19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
பவானி மூர்த்தி
என் உயிர்க் கண்ணம்மா
இன்பத்தில் ஊறிடும்
இனியவளே கண்ணம்மா
துன்பத்தை விரட்டிடும்
தூயவளே கண்ணம்மா
என்னுயிராய் மாறியவளே
என்றனது கண்ணம்மா
பொன்னென மின்னிடும்
புதுமையே கண்ணம்மா
கண்ணம்மா என்றபேர்
காதலை சொல்லுதடி
வண்ணமாய் வா அருகில்
வாரியும்
அணைத்திடுவேன்
உண்மையைச்
சொல்லிடிலோ உன்மத்தம்
ஏறுதடி
கண்களில்
மையல்கொண்டு
கன்னத்தில் முத்தமிட்டேன்
ரதியாக வந்தவளே
ரசித்தேனே உன்னழகை
பதியாகப் பதிப்பாயோ
பரிதவிக்கும் என்றனையே
விதிசெய்த வித்தகியே
விலகாதே என்னைவிட்டே
சதிகாரி என உலகம்
சண்டையிடும் உன்னிடமே !
இமைக்கின்ற விழிகளிலே
இமையாக நானிருப்பேன்
சுமையல்ல நீ எனக்கு
சுகந்தானே கண்ணம்மா
அமைகின்ற காதலிலே
அனுதினமும் நீ வேண்டும்
இமைப்போழுதும்
என்னுயிராய் இருப்பவளே
கண்ணம்மா ! கண்னம்மா !
என்னுயிரே கண்ணம்மா !
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...