மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 207

“யோசி”

சிந்திக்கும் திறன் பெற்றாய் அதனால் சிகரம் தொட்டாய் மனிதா!
சிந்திக்காமலே செயலாற்றி சிறுமை அடைதல் தகுமா?
ஆறறிவு படைத்திருந்தும் விலங்கு நிலை அடைகின்றாய்
ஆசையின் வசமாகி அறிவை இழப்பது சரியா?
இதை நன்றாய் நீ யோசி!

ஆற்றும் கருமம் யாவும் ஆராய்ந்து செய்தலே அறிவுடமை
மாறாய் இறங்கிய பின் பார்த்துக்கொள்ளலாம் என எண்ணுவது மடமை
கருமங்கள் ஆயிரம் வரிசையில் காத்திருக்கு முன் கவனத்துக்காய்
ஆழமறியாது காலைவிடுதல் நன்றாகுமா?
இதை நீ யோசி!

பணம் தேடல் வாழ்க்கையில் மிகவும் பிரதானம்
அதை நல்வழியில் தேடிடுவாய் “அவதானம்”
சோம்பல் தவிர்த்திடுவாய் முயற்சி கைவிடாது
திருவினையாக்கிடுவாய்.

உலகம் பழிக்கும் செயல்யாவும் மறந்திடுவாய்
நல்லதையே நாடு,நாடே உன்னை வரவேற்கும்
அடுத்தவர்க்கு உதவிடுவாய் இறையருளும் தேடிவரும்
நன்றே செய்ய, என்றும் நீ யோசி!

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading