” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 207

“யோசி”

சிந்திக்கும் திறன் பெற்றாய் அதனால் சிகரம் தொட்டாய் மனிதா!
சிந்திக்காமலே செயலாற்றி சிறுமை அடைதல் தகுமா?
ஆறறிவு படைத்திருந்தும் விலங்கு நிலை அடைகின்றாய்
ஆசையின் வசமாகி அறிவை இழப்பது சரியா?
இதை நன்றாய் நீ யோசி!

ஆற்றும் கருமம் யாவும் ஆராய்ந்து செய்தலே அறிவுடமை
மாறாய் இறங்கிய பின் பார்த்துக்கொள்ளலாம் என எண்ணுவது மடமை
கருமங்கள் ஆயிரம் வரிசையில் காத்திருக்கு முன் கவனத்துக்காய்
ஆழமறியாது காலைவிடுதல் நன்றாகுமா?
இதை நீ யோசி!

பணம் தேடல் வாழ்க்கையில் மிகவும் பிரதானம்
அதை நல்வழியில் தேடிடுவாய் “அவதானம்”
சோம்பல் தவிர்த்திடுவாய் முயற்சி கைவிடாது
திருவினையாக்கிடுவாய்.

உலகம் பழிக்கும் செயல்யாவும் மறந்திடுவாய்
நல்லதையே நாடு,நாடே உன்னை வரவேற்கும்
அடுத்தவர்க்கு உதவிடுவாய் இறையருளும் தேடிவரும்
நன்றே செய்ய, என்றும் நீ யோசி!

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan