இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

விருப்பு

விருப்புக் கொண்டே விவசாயம் செய்தால்
வருகின்ற காலம் வளமாய் இருக்கும்
உருக்குலையா உடலும் உளமும் உறுதியடைய
கருணை கொண்டே காக்கும் உள்ளங்கள்

உலகில் பெருக உண்டி நிரம்பும்
பலமும் கூட பெருவாழ்வு கிட்டும்
துலங்கிடும் வாழ்வு தரணியில் ஓங்கி
நிலமும் வளமாகி நானிலம் செழிக்கும்

செய்யும் தொழிலும் சிறப்பு அடைய
மெய்யை வருத்தி மேதினியில் வாழ்ந்து
விருப்பு டனேயும் வளங்களைப் பெருக்குக…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading