மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

இரா.விஜயகௌரி

சுதந்திரமாமே…………

சுந்தர எழிலாய் சிறகு விரித்து
எல்லைகள் இல்லா தடங்களைத் தொட்டு
காற்றின் அணுக்களில் காவியம் படைத்து
வெற்றி கொள்வதே சுதந்திர மாண்பு

கொடுப்பதும்பெறுவதும் பறிப்பதும்-பின்
அடக்கியும் அடங்கியும் முடங்கியும்
முனகித்தவித்தலைவதும். இவைதாம்
அடிமைத்தளையின் ஆணவப்பிடியோ

எனக்கென உள்ள உரிமைகள் தம்மை
நானே உணர்ந்து நானிலம் தொடுகின்
தடைகளை இடவும் தாண்டிட விளைவதும்
சுதந்திரச்சிறகுகள் அரிவதன் நிலையோ

உணர்ச்சிப் பிழம்பில்உழல்வது அல்ல
உலகின் பரப்பினைஉள்வாங்கி எழுவதும்
வேரிடம் தொட்டு விரிந்து வாழ்வதும்
எண்ணம் விரிய ஏற்றம் படைப்பதும்
சுதந்திரச் சிறகதன் செறிவே என்பேன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading