இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சக்தி சக்திதாசன்

கல்லல்ல இதயம்
சொல் கொண்டு தாக்க‌
மெல் எனும் உணர்வு
சுள் என்றே வலித்தது

நல் எண்ணம் கொண்டு
வல் கின்ற வினைகள் ஏனோ
முள் என்றே நெஞ்சில்
உள் கொண்டு தைக்க‌

பொல் லாத உலகில்
இல் லாமல் போனால்
நில் லாமல் ஓடும் வாழ்வு
சொல் லாமல் சொல்லும்

நான் ஒன்று நினைத்தால்
தான் ஒன்று நினைக்கும்
மேல் நிற்கும் ஒருவன்
ஊழ் கொண்டு விளையாட்டு

எது வந்த போதும் ஏற்றிடும்
மெது வான உள்ளம் தான்
பொது வாக யாவும் எனை
அது வாகத் தாக்கும் வேளை

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading