இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

நகுலா சிவநாதன்

சிலைகள்
பொன்னாய் மின்னும் சிற்பங்கள்
பொழுதை நிறைக்கும்
நற்சிலைகள்
கண்ணைக் கவரும் வடிவங்கள்
கருணை யளிக்கும் தெய்வங்கள்
எண்ணம் பேசும் எழில்வடிவம்
என்றும் மிளிரும் அழகுநிறம்

நிறங்கள் பலவாய் ஒளிர்ந்தோங்கும்
நீண்ட நாட்கள் அருளாக்கும்
திறன்கள் சேர்ந்து வரமாகும்
திறமை உணர்ந்து வடிவமாகும்
குறைகள் நீக்கும் நம்பிக்கை
கூட அருளும் இறைவாக்கு
கறைகள் மனத்தில் நீக்கிடவே
கனிந்து உருக வைத்திடுமே!!

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading