பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கீத்தா பரமானந்தம்

ஊக்கி!
தேனாம் பொழுது
தேக்கம் காணில்
மாற்றங் கூட்டும்
மந்திரக் கயிறாய்
மனத்தை இயக்கும்
மகுடிதானே ஊக்கி!

துவழும் தோளைத்
தூக்கி நிறுத்தி
துன்பப் படகைத்
துடுப்பாய் வலித்தே
இன்பக் கரையையின்
இலக்கைச் சுட்டும்!

ஊக்கியற்ற வாழ்வு
போக்கற்ற பொழுதாய்
தேக்கத்தைக் காணும்
தேனான ஆயுள்

விளக்கதன் சுடருக்கும்
வேண்டுமங்கே தூண்டுகின்ற விரல்கள்
கிழக்கதுவின் கதிராகி மின்ன
கீர்த்தியென ஊக்கியது தானே!

கீத்தா பரமானந்தன்13-02-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading