நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

நன்றியாய் என்றுமே (727) 04,09.2025

நன்றியாய் என்றுமே Selvi Nithianandan மண்ணிலே மெல்லவே அகரத்தை கிறுக்கி கண்ணிலே நீர்வடிய கட்டி அணைத்தவர் அம்மாவின் முந்தானை கைவிடாத...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

நெஞ்சினிலே
———-
காதல் நெஞ்சில் கருணை உள்ளம்
தேடும் ஆற்றல் தினமும் மெய்க்கும்
வாழ்வில் வசந்தம் வீசும் மட்டும்
பாடும் கவிதை மனதில் மட்டும்
நெஞ்சமெல்லம் நினைவுகள் நித்தம் நீயே
வஞ்சமில்லா மாயோனே மனதில் கொண்டே
துஞ்சும் எனது கண்கள் சோகமதில்
விஞ்சும் விழிநீர் இருவிழிகளிலிருந்தே
மாற்ற நினைக்கும் மனமோ இல்லை
தேற்ற ம் துடிக்கும் நினைவுகள் எல்லை
காற்றை மறிக்கும் கனவுகள் என்ன
மாறிவிடும் என்ற நினைப்பா சொல்ல
நித்தம் நித்தம் உம்நினைவில் ஏக்கமுடன்
சத்தமின்றி தனிமையிலே தவித்திடும் உள்மனதோ
எக்கணமும் உம்வரவு என்ற மாயை மனம்
தெஞ்சினிலே புலம்பிடவே
நிஐமில்லா கற்பனையில
நானும் வாழ்ந்திடவா.
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan