” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்
97

“சாதனை”

மனிதன் வாழ்ந்தான்
என்பது முன்வரிசை அல்ல
அவன் எப்படி தடைகளை தகர்த்து
சாதனை படைத்தான்
அதுவே சரித்திரம்

எம் இனத்திற்காக
எம் மொழிக்காக
எம் தேசத்திற்காக

தம்மை இழந்து
தம் குடும்பத்தை இழந்து
தாய் தேசத்திற்காக வாழ்ந்து
சாதனை புயலாய் சரித்திரம் படைத்தவர்கள்
எங்கள் தலைவர் பிரவாகரன்
மாவீர மகுடங்கள்

இன அழிப்பு
ழொழி அழிப்பு
ஆவணம் எரிப்பு
பேச வாய் இன்றி
பெற்றவர் உற்றவர்
நாடு கடந்து ஓடினம்

நாள்பட்ட பிரச்சனை
நாற்காலியில் இருந்து பாக்கல்ல
நானிலத்திலும் சமர்
நறுக்கென நாலு வார்த்தை கேட்ட செய்தியாளர் கடத்தல்

துணிந்து நின்று
போர் தூண்டிக்கும் வரை
போர் தொடுத்து
மானமுள்ள தமிழனாய்
மண்டியிடாமல்
மடிந்தவர்கள்
மாவீரர் மகுடங்கள்

தமிழன் சாதனையை முறியடிக்க
இந்திய புலன் ஆய்வு துறையின்
புது புரளி
பழநெடுமாறன்
ஐயாவின் நாடகமா ??

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan